இருப்பாலையில் இடம்பெற்ற பாரிய மினிபஸ் விபத்தின் பின்னர் மினிபஸ்ஸில் பிரயாணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை தீடிரென்று குறைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று இடம்பெற்ற கோரவிபத்தில் மூவர் பலியானதோடு 10 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
குறித்த விபத்திற்கு மினிபஸ்சாரதியின் அதி வேகமே காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இன்று பொது மக்கள் மினிபஸ்களில் பிரயாணம் செய்வதற்கு முன்வரவில்லையென்பதால் மினிபஸ்கள் பெருமளவான பிரயாணிகள் இன்றியே பிரயாணம் செய்துள்ளன.
இதேவேளை இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களில் அதிக எண்ணிக்கையான பொது மக்கள் பிரயாணம் செய்ததையும் அவதானிக்க முடிந்துள்ளதாக தெரியவருகின்றது.
0 kommentarer