வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் படை வீரர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் பலியான 27 பேரில் வெளிநாட்டவர்களோ தமிழ், முஸ்லிம் கைதிகளோ எவரும் பலியாகவில்லையென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் எம்.எஸ்.சதீஸ்குமார் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் பலியானவர்களில் இரு வெளிநாட்டவர்களும் 3 தமிழ் கைதிகளும் உயிரிழந்ததாக சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகளை அவர் நிராகரித்துள்ளார்.
இந்நிலையில் பலியான 27 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
0 kommentarer