இலங்கை அரசியலில் சில தரப்பினரின் அதிருப்திக்கு ஆளாகியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவியான அனோமா பொன்சேகா, அரசியல் செயற்பாடுகளுக்கு விடைகொடுத்து விட்டு அமெரிக்கா சென்று குடியேறவுள்ளார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.
தனது விடுதலை என்பது மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளதன் காரணமாக தனது மனைவியை அரசியலில் முழுமையாக ஈடுபடுத்த சரத் பொன்சேகா விரும்பியிருந்தும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெரும்பாலானோர் இதற்கு இணக்கம் தெரிவிக்காமையே அனோமாவின் அரசியல் துறவறத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் 18 ம் திகதி சரத் பொன்சேகாவின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டம் ஒன்றில் அனோமா பொன்சேகாவையும் கலந்து கொள்ளச் செய்வுள்ள சரத் பொன்சேகாவின் தீர்மானத்துக்கு அனைத்திலங்கை மாணவர் முன்னணி தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையிலேயே அனோமா பொன்சேகா தனது இரு புதல்விகளுடன் அமெரிக்கா சென்று நிரந்தரமாகக் குடியேறவுள்ளார் என அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 kommentarer