இலங்கையில் பாரியளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தமது போஸ்டர்களையும் கட் அவுட்களையும் அகற்றுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்தப் பணிப்புரை பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும் முன்னர் இந்த போஸ்டர்களையும் கட் அவுட்டுகளையும் அகற்றுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் பல பகுதிகளிலும் மஹிந்த ராஜபக்சவின் பாரியளவிலான கட் அவுட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொதுமக்கள் தமது கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ள நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
0 kommentarer