Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

ஆயுதங்களுடன் வடகொரியாவில் இருந்து சிறீலங்கா நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று தாய்லாந்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டதாக நேற்றிரவு பரபரப்பான தகவல்கள் வெளியாகியிருந்தன.தாய்லாந்தின் டொன்மியூங் விமான நிலையத்தில் விமானம் ஒன்று எரிபொருள் நிரப்புவதற்காக அவசரமாக தரையிறங்கியதைத் தொடர்ந்து, விமானத்தை தாய்லாந்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் 35 தொன் ஆயுதங்கள் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஆனால் இந்த விமானம் சிறீலங்காவுக்கு சொந்தமான ஆயுதங்களை சுமந்து வரவில்லை என்று சிறீலங்கா தெரிவித்துள்ளது. ஆனால் விமான ஓட்டி மற்றும் விமான சிப்பந்திகளின் தகவல்களின் படி இந்த விமானம் சிறீலங்காவுக்கே வந்தன என தெரிவிக்கப்பட்டது.இதே வேளை, இந்த ஆயுதங்கள் அல்கைடாவினருக்கு சிறீலங்கா ஊடாக தருவிக்கப்பட இருந்ததா எனவும் அமெரிக்க அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். காவிக்செல்லக்கூடிய பீரங்கி ஆயுதங்கள், றொக்கட் புறோப்பெலர்கள், ஆர்.பி.ஜி கிரனேட்டுக்கள், விமான எதிர்ப்புப் பீரங்கிகள் ஆகியன அந்த விமானத்தில் வைக்கப்பட்டிருந்தன என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.இலங்கையில் போர் முடிவடைந்த போதிலும் விமானம் மூலம் அங்கு ஆயுதங்கள் இதற்கு முன்னரும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.சம்பந்தப்பட்ட விமானம் நேற்றுக் காலையிலும் டொன்மியூங் விமான நிலையத்தில் எரிபொருள்களை நிரப்பிக் கொண்டு வடகொரியா நோக்கிச் சென்றது என்றும் அங்கிருந்து திரும்பிவந்து நேற்றுப் பிற்பகலிலும் எரிபொருள் நிரப்புவதற்கு தரை இறங்கக் கேட்டதாகவும் இதற்கிடையில் அமெரிக்காவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான வான் போக்குவரத்து ஒப்பந்தத்துக்கு இணங்க குறிப்பிட்ட விமானம் கனரக ஆயுதங்களுடன் வருவதாக அமெரிக்கா தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தது.அதனைத் தொடர்ந்து தாய்லாந்து அதிகாரிகளும் குறிப்பிட்ட விமானத்தை இறங்க அனுமதித்து அதனை ஆயுதங்களையும் பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.

அதிகம் பார்க்கப்பட்டவை