அட்டாளைச்சேனை, அஷ்ரப் நகர் பிரதேசத்தில் 11 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த ஊர்காவல் படை வீரர் ஒருவர் நேற்று மாலை அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை, அஷ்ரப் நகர் பிரதேசத்தில் குறித்த சிறுமியை ஊர்காவல் படைவீரர் பலவந்தமாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக, சிறுமியின் பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான ஊர்காவல் படைவீரரே சிறுமியை துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சிறுமி பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
0 kommentarer