இலங்கையின் தலைநகர் கொழும்பில் அதிகளவான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு பிரஜைகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பிராந்திய வலயத்தில் அதிகளவு உடல் ரீதியான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் இடம்பெறும் நாடாக இலங்கை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கான ஐரோப்பிய வர்த்தக சம்மேளனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளில் இந்த விடயம் புலனாகியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளை விடவும் தலைநகர் கொழும்பில் அதிகளவு பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேர்த்தியாக ஆடை அணிந்த கௌரவமான தோற்றமுடையவர்களே அதிகளவு பாலில் தொந்தரவு கொடுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி உள்நாட்டு பெண்களும் இரவு எட்டு மணிக்கு பின்னர் தனியாக நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்கரையோரங்கள் உள்ளிட்ட சன நெரிசல் மிக்க இடங்களில் அதிகளவில் பாலியல் சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 kommentarer