லண்டனில் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டன் லிவர்புல் நகரில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வேலை செய்து வந்த முருகையா என்பவர் நீண்டகாலமாக கடனட்டை மூலம் எரிபொருள் நிரப்புவர்களின் தகவல்களை மூன்றாம் தரப்பிற்கு வழங்கி சுமார் 73 இலட்ச ரூபா மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முருகையா செல்வகுமாரன் என்ற 36 வயது நபர் அங்கு சட்டவிரோதமாகத் தங்கி இருந்ததுடன் போலிப் பெயரிலே வேலை செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் தொழில் பார்த்த எரிபொருள் நிறப்பு நிலையம் இலங்கைத் தமிழ் குடும்பமொன்றுக்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 kommentarer