தமிழக சட்டசபைத்தேர்தலில் தாங்களும் தங்கள் தலைமையிலான அண்ணாதிராவிட முன்னேற்றக்கழக கூட்டு அணியினரும் பெற்றுள்ள ஜனநாயகப் பெரு வெற்றி குறித்து அளவற்ற ஆனந்தமும் தங்கள் மீது குறைவற்ற நம்பிக்கையும் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் சார்பில் வாழ்த்துவதில் அதிகம் மகிழ்ச்சி அடைகிறோம்.
நல்லாட்சியொன்றிற்கான அடிப்படைகளை ஏற்கனவே தங்கள் ஆட்சிக்காலக்காலத்தில் தமிழக மக்கள் சுவைத்திருக்கிறார்கள் என்பதையே இவ் ஆட்சி மாற்றத்திற்கான தீர்ப்பு வெளிப்படுதியிருக்கின்றது. தங்கள் மீதும் தங்கள் செயல்த்திறன்கள் மீதும் தமிழக உறவுகள் கொண்டிருக்கின்ற நம்பிக்கை எம்மை நெகிழ்ச்சிக்கு இட்டுச்செல்கிறது.
அந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாகவே ஈழத்தமிழர்களும் தங்களைப் பார்க்கிறார்கள். எமது மக்களி;ன் அரசியல் துயரங்களும் அவர்களின் அரசியல் ஆவலும் தங்களால் புரிந்து கொள்ளப்பட்ட விடயங்களே. அதனாலேயே தங்களின் அரசியல் வெற்றியை ஈழத்தமிழர்களின் வெற்றியாக எமது மக்கள் உணர்ந்து நிற்கிறார்கள்.
குறிப்பாக மாண்புமிகு முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் ஆட்சிக்காலம் ஈழத்தமிழர்களுக்கு எவ்வாறு ஆறுதலையும்பாதுகாப்பையும் வழங்கியதோ அதே காலம் தங்கள் ஆட்சிக்காலத்தில் மலரும் என்று எமது மக்கள் நம்புகிறார்கள். தங்களுடைய இந்த ஆட்சிக்காலம் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் மீட்சிக்கும; தாய்த் தமிழகத்தின் நல்லாட்சிக்கும் பாரத மாதாவின் கீர்த்திக்கும் வலிமை சேர்க்கவேண்டும் என்று வாழ்த்துவதில் நிறைவடைகின்றோம்.
நன்றி.
சிவஞானம்சிறிதரன்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இலங்கை.
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அவர்கட்கு ஈழத்தமிழினத்தின் சார்பில் வாழ்த்துகிறோம் அம்மணி’ - சிவஞானம் சிறிதரன்
Lagt inn av
chandran
14.05.11
0 kommentarer