இந்தியாவின் ஐ.என்.எஸ். சாவித்திரி 144" என்ற யுத்தக் கப்பல் இந்திய கடற்படையினருடன் இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கிறது.
கொழும்புத் துறைமுகத்தில் தற்போது தரித்து நிற்கும் ஜ.என்.எஸ் சாவித்திரி 144 என்ற இந்தியாவின் யுத்தக் கப்பலுக்கு, இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் திசேரா சமரசிங்க உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
அவர் கப்பலில் தங்கியுள்ளள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் கடற்படைத் தளங்களின் பாதுகாப்பு நடவடிக்கைள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கடற்படைத் தளபதி- அலோக் பிரசாத் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையினருடன் ஐ.என்.எஸ். சாவித்திரி 144" யுத்தக் கப்பல் தொடர்ந்தும் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய "ஐ.என்.எஸ் சாவித்திரி 144" யுத்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்
Lagt inn av
chandran
05.10.09
0 kommentarer