ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான பிரதிநிதி வோல்டர் கெலின் இன்று மாலை 6.50 மணியளவில் இலங்கைக்கு சென்றடைந்துள்ளார்.
இந்தநிலையில் அவர், இலங்கையில் உயர்மட்டத் தலைவர்களை சந்திப்பதுடன், வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலவரம் தொடர்பிலும் நேரில் ஆராய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஐக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலக பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஐக்கிய நாடுகளின் அரசியல்துறை உதவிச் செயலாளர், லின் பாஸ்கோ இலங்கைக்கு வந்து திரும்பிய நிலையிலேயே வோல்டர் கெலினின் விஜயம் இடம்பெற்றுள்ளது.
லின் பாஸ்கோ, ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான் கீ மூனின் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கையளித்ததுடன், இடம்பெயர்ந்த மக்கள் உடனடியாக மீளக்குடியமர்த்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளித்திருந்த ஜனாதிபதி, மக்களை எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் மீளக்குடியேற்றுவதாக தெரிவித்திருந்தார்.
0 kommentarer