செனல் போ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழர்கள் படுகொலை காட்சிகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக ஜேர்மன் பொலிஸின் ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கம் நாடியுள்ளது.இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பாக ஜேர்மன் பொலிஸாரின் உதவியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனில் இயங்கும் ஜனநாயகத்துக்கான செய்தியாளர் அமைப்பு குறித்த சனல் 4 காட்சிகளுக்கு பின்னணியில் இருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து வெளியேறிய பல செய்தியாளர்கள் ஜேர்மனின் ஜனநாயகத்துக்கான செய்தியாளர் அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ளார்கள். இந்தநிலையில் அவர்கள் மூலமாகவே வெளிப்பாடு காட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வெளியாகியுள்ளது. இதேவேளை இலங்கையின் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து பிரித்தானியாவில் ஆராய்ந்து வருவதாக மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ தெரிவித்துள்ளார்.
"சனல் 4" குறித்த விசாரணைகளுக்கு ஜெர்மன் பொலிஸின் உதவியை இலங்கை நாடுகிறது
Lagt inn av
chandran
24.09.09
0 kommentarer