Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com
Lagt inn av chandran 17.07.13

காதலியை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்ட காதலன் விளக்கமறியலில்!- கோமா நிலைக்குள்ளான கர்ப்பிணித் தாய் மரணம்


காதலியை ஏமாற்றி, 16 லட்சம் ரூபா பணத்தையும் 54 பவுண் தங்க நகையையும் மோசடி செய்த நபரை கொழும்பு கோட்டை பதில் நீதவான் பிரியந்த லியனகே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். கிறிஷான் பீரிஸ் என்ற நபரே எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் சாட்சியமளித்த சந்தேக நபரின் காதலி,தான் சிறிய வயதில் இருந்து சந்தேக நபரை காதலித்து வந்ததாகவும் நியூசிலாந்து விசாவை பெற்று அங்கு குடியிருக்க போவதாக கூறி, தன்னிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை பெற்று கொண்டதாகவும் கூறினார். தான் தற்போது கர்ப்பிணியாக இருப்பதாகவும், நிரந்தர வருமானம் இல்லாத தனது காதலர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் குறிப்பிட்டார். சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டு கோமா நிலைக்குள்ளான கர்ப்பிணித் தாய் மரணம் திருகோணமலை கிண்ணியா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, கோமா நிலையிலிருந்த கர்ப்பிணி தாய் ஒருவர் இன்று திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கிண்ணியா குட்டிக்கராச்சியைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தாயான 43 வயதான கனூன் என்பவரே இன்று காலை 10 மணியளவில் உயிரிந்துள்ளார். கடந்த வருடம் டிசம்பம் மாதம் 28 ஆம் திகதி தனது ஏழாவது பிள்ளை பேறுக்காக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக அவர் கோமா நிலையை அடைந்தார். இதனையடுத்து, மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில், மீண்டும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே 6 பிள்ளைகளை அறுவை சிகிச்சையின்றி அவர் பெற்றெடுத்திருந்தார். இந்த நிலையில், சத்திரசிகிச்சையை மேற்கொண்ட நான்கு வைத்தியர்களுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. விசாரணைகள் நடைபெற்று வரும் சந்தர்ப்பத்தில், கோமா நிலையைில் இருந்த அந்த பெண், சுமார் 7 மாதங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார். பெண்ணின் சடலம் திருகோணமலை பொது வைத்தியாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதிகம் பார்க்கப்பட்டவை