யாழ்.குடாநாட்டில் கடந்த சில தினங்களாக இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்களின் தொடர்ச்சியாக புன்னாலைக்கட்டுவன் - ஈவினை பகுதியில் வீட்டின் கூரை பிரித்துப் புகுந்து கொண்ட கொள்ளையர்கள் வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற குறித்த கொள்ளைச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் இன்றுகாலை 10 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுச் சென்றதுடன் மாலை 4 மணியளவில் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.
இந்த குறிப்பிட்ட நேர இடைவெளிக்குள்ளே வீட்டின் கூரையை பிரித்துக் கொண்டு கொள்ளையர்கள் வீட்டினுள் புகுந்து, வீட்டிலிருந்த 5 பவுண் நகை மற்றும் கைத்தொலைபேசிகள் மற்றும் பெறுமதியான பொருட்களை சூறையாடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் வீட்டிற்குத் திரும்பியபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தபோதே சம்பவம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 kommentarer