வத்திக்கான் சிட்டி புனித பீட்டர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்புப் பிரார்த்தனையின்போது இளம் பெண் ஒருவர் புனித பாப்பரசர் மீது மோதி அவரைக் கீழே வீழ்த்தினார். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. |
கிறிஸ்தவர்களின் தலைமை பீடமான வத்திக்கானில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி போப்பாண்டவர் சிறப்பு பிரார்த்தனை நடத்தி நற்செய்தி வெளியிடுவது வழக்கம். இந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க வத்திக்கான் சிட்டி புனித பீட்டர் தேவாலயம் பகுதியில் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் திரண்டிருந்தனர். நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைக்காக போப்பாண்டவர் 16 ஆம் பெனடிக்ட் வந்தார். அவர் தங்க, வெள்ளை நிற அங்கி அணிந்திருந்தார். 82 வயதான அவரை பலத்த பாதுகாப்புடன் தேவாலய பாதுகாவலர்கள் அழைத்து வந்தனர். புனித பீட்டர் தேவாலயத்துக்குள் அவர் வந்த போது இரு பக்கமும் திரண்டிருந்த கிறிஸ்தவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் இளம் பெண் ஒருவர் தடுப்பு கம்பியை தாண்டி குதித்தார். பிறகு அதேவேகத்தில் போப்பாண்டவர் மீதி மோதினார். அப்போது போப் அணிந்திருந்த அங்கியை பிடித்துக் கொண்டார். |
0 kommentarer