தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் இனி இந்தியாவுக்கு செல்லமுடியாதவாறு அவரது விசா அனுமதி தடை விதிக்கப்பட்டுள்ளதாக த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. |
சிவாஜிலிங்கம் அண்மையில் டுபாயில் இருந்து இந்தியாவுக்கு வந்த வேளையில் விமான நிலையத்தில் வைத்து இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டார். இந்த நிலையில் அவர் இந்திய மத்திய அரசாங்கத்தின் சிறப்பு கட்டளையின் அடிப்படையிலேயே நாடுகடத்தப்பட்டதாகவும் அவருக்கான விசா அனுமதி தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் அவர் வாடிக்கையாக சென்னைக்கு சென்று வந்துக் கொண்டிருந்தார். அந்த காலக்கட்டங்களில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயங்களில் தமது பாதுகாப்பு பிரச்சினைகளை காரணம் காட்டி அவருக்கு அங்கிருக்க அனுமதிவழங்கப்பட்டது. எனினும் தற்போது அவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகின்ற நிலையிலேயே அவர் இந்தியாவுக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு அறிக்கை ஒன்று அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்திய மத்திய அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
சிவாஜிலிங்கம் இனி இந்தியாவுக்கு செல்லமுடியாதவாறு அவரது விசா அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
Lagt inn av
chandran
28.12.09
0 kommentarer