Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

வவுனியா பூந்தோட்டம் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சந்தேக நபர் ஒருவர் கைவிலங்குடன் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
21 வயதான கணேஸ் காளிதாசன் என்ற இளைஞரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். வவுனியா பூந்தோட்டம் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த இவர் வயிற்றில் உபாதை ஏற்பட்டுள்ளதாகக் கூறியதை அடுத்து அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சந்தேகநபர் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த 25ம் திகதி எவருக்கும் தெரியாமல் கைவிலங்குடன் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நபரின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரு பொலிஸ் சிப்பாய் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, அவரை அடுத்த மாதம் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதவான் எலக்ஸ் ராஜா உத்தரவிட்டுள்ளார். ஏனைய இருவர் தமது சொந்த இடங்களுக்குச் சென்றுள்ள நிலையில், மீண்டும் பணிக்குத் திரும்பவில்லையெனவும், அவர்கள் பணிக்குத் திரும்பியதும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அதிகம் பார்க்கப்பட்டவை