திருவனந்தபுரத்தில் வெளிநாட்டு கிரடிட்கார்டு மூலம் ரூ.10லட்சம் மோசடி: 4 பேர் கைது
திருவனந்தபுரம் அருகே உள்ள பேரலை என்ற இடத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 36). இவர் அடிக்கடி பொருட்கள் வாங்க பெருங்கடைகளுக்கு செல்வார். அப்போதெல்லாம் அவர் வெளிநாட்டு கிரடிட் கார்டுகளை கொடுத்து பொருட்களை வாங்கி விட்டு செல்வார்.
இதே போல் பல கடைகளிலும், ஜவுளி கடைகளிலும் கிரடிட் கார்டு மூலம் கைவரிசை காட்டி வந்தார். பாதிக்கப்பட்ட வர்த்தக நிறுவன உரிமை யாளர்கள் போலீசில் புகார் செய்து வந்தனர்.
இந்த நிலையில் திருவனந்தபுரம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி போலீசார் ரஞ்சித்தை தேடிவந்தனர். அப்போது திருவனந்தபுரத்தில் உள்ள கடையில் பொருட்களை வாங்கி கொண்டு கிளம்பிய ரஞ்சித்தை மடக்கினர். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் போலீ சில் தனக்கு கீழ் வெளிநாட்டு கிரடிட் கார்டுகளை பயன் படுத்தி மோசடி செய்யும் மேலும் 7 பேர் இருப்பதாக கூறினார்.
இதனையடுத்து போலீசார் சென்னையை சேர்ந்த ஸ்ரீராமன் (38) பட்டத்தை சேர்ந்த சோமு (27) மற்றும் அபிலாஷ் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் ரஞ்சித் உட்பட 10 பேர் கொண்ட கும்பலுக்கும் தலைவனாக இருந்து செயல்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதனால் தலைமறைவான 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர். கைதான ரஞ்சித் உள்பட அவருடைய கும்பலை சேர்ந்த 3 பேரிடம் இருந்து 70-க்கும் மேற்பட்ட கிரடிட் கார்டுகளை போலீ சார் பறிமுதல் செய்தனர்.
வெளிநாட்டு கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி ரஞ்சித் தலைமையிலான கும்பல் இதுவரை ரூ.10 லட்சம் வரை பொருட்கள் வாங்கி பண மோசடி செய்துள்ளனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் வெளிநாட்டு கிரடிட்கார்டு மூலம் ரூ.10லட்சம் மோசடி: 4 பேர் கைது
Lagt inn av
chandran
23.09.09
0 kommentarer