மாத்தளையில் ரத்தோட்டைப் பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ரத்தோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரத்தோட்டை நிக்கலோயா கீழ்பிரிவு தோட்டத்தில் கடந்த ழூன்று நாட்களுக்கு முன்பு பெய்த கடும் மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டதையடுத்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றயதினம் ரத்தோட்டை பகுதியிலுள்ள ஆறு ஒன்றில் இருந்து சண்முகம் சதாசிவம் என்பவரின் சடலம் மிட்கப்கபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், காணாமல் போன ஐந்து பேரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
0 kommentarer