யாழ்ப்பாணத்தில் நல்லூர் முருகன் ஆலயத் திருவிழா உற்சவத்தில் கடமையாற்ற, விசேடமாக அறுநூறு பொலிசார் ஆலயத்தைச் சூழவுள்ள பகுதிகளில் கடமையாற்றவுள்ளார்கள்.
ஆலய உற்சவ காலத்தில் இடம்பெறக் கூடிய திருட்டுக்கள், குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதுடன் வீதிகளிலுள்ள தடை நிலையங்களில் கடமையாற்றல் உட்பட பல்வேறு கடமைகளிலும் பொலிசார் ஈடுபடவுள்ளனர் என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, உற்சவ காலத்தில் சிவில் உடையிலும், சீருடையிலும் பொலிசார் கடமையாற்றுவதுடன் பெண் பொலிசாரும் இப்பணியில் ஈடுபடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆலஙத்திற்கு வரும் பெண்கள் தமது பெறுமதி மிக்க தங்க நகைகளை அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்வதுடன் பெறுமதி மிக்க ஆவணங்களையும் ஆலய சுற்றாடலுக்கு கொண்டு வருவதை தவிர்க்குமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார்.
0 kommentarer