மத்திய கிழக்கிற்கு வீட்டுப் பணிப் பெண்களாக வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கைப் பெண்களில் பலர் மீண்டும் சடலங்களாக நாடு திரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கிற்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்லும் பெண்களில் 100 பேர் வருடாந்தம் சடலமாக நாடு திரும்புகின்றனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இயற்கை விபத்துக்கள், கொலை, தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இவ்வாறு பெண்கள் உயிரிழப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
2009ம் ஆண்டில் 153 பெண்களின் சடலங்களும், 2010ம் ஆண்டில் 218 சடலங்களும் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்குச் செல்லும் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் சடலமாக நாடு திரும்புகின்றனர்
Lagt inn av
chandran
03.09.11



0 kommentarer