ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடக் கூடாது எனவும், தனித்து போட்டியிட வேண்டுமெனவும் முஸ்லிம் காங்கிரஸ் அடிமட்ட உறுப்பினர்கள் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
முஸ்லிம் பிரதேசங்களில் தனித்து போட்டியிட்டிருந்தால் அதிகளவான உறுப்பினர்களை வென்றிருக்க முடியும் என கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட போது முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்த போதிலும் இதுவரையில் அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.



0 kommentarer