
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வல்வெட்டித்துறை நகரசபை வேட்பாளர் எம்.கே.சிவாஜலிங்கத்தின் அலுவலகத்திற்கு வானில் வந்த மர்ம நபர்கள் கழிவுப் பொருள்களை வீசிச்சென்றதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
வல்வெட்டித்துறை காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள தமது அலுவலகத்துக்கு இன்று அதிகாலை 3 மணியளவில் வானில் வந்த மர்ம நபர்கள் மீது பத்து பொலித்தீன் பைகளில் கழிவுகளை வீசிவிட்டு சென்றதாக தெரிவித்தார்.
ஆனால் அலுவலகத்தில் இருற்து இருநூறு மீற்றர் தொலைவில் இராணுவ முகாம், பொலிஸ் நிலையம் என்பன அமைந்துள்ளது. என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
தமிழ் கூட்டமைப்பு வேட்பாளர் சிவாஜலிங்கத்தின் அலுவலகத்திலும் கழிவுப் பொருள்கள் வீச்சு
Lagt inn av
chandran
09.07.11



0 kommentarer