
நடந்து முடிந்த சட்டமன்றப் பேரவைத் தேர்தல்லில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதல் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட ஜெயலலிதாவுக்கு இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம் தங்களது நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அத்துடன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் எம்ஓஎக் ஃபாரூக், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இக்பால் சிங், உச்சநீதிமன்ற நீதிபதி பி.சதாசிவம், முன்னாள் தமிழக ஆளுநர் பி.எஸ்.ராமமோகன் ராவ், மற்றும் பாரஜக செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ரவி சங்கர் பிரசாத் ஆகியோரும் தமிழக முதல் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட ஜெயலலிதாவுக்கு தொலைபேசி மூலம் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதல் அமைச்சர் ஜெயலலிதா தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 kommentarer