| யாழ் மறை மாவட்ட ஆயர் வண. தோமஸ் சௌந்தரநாயகம் வன்னியில் இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற புதுமாத்தளன் பிரதேசத்திற்கு படையினரின் அனுமதியுடன் பயணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. |
கடந்த மாதம் 29ம் திகதி அவர் புதுமாத்தளன் பிரதேசத்திற்கு படையினருடன் சென்று அங்குள்ள நிலைமைகளை அவதானித்து விட்டு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அங்கு தான் கண்ட போரின் கொடூரங்களையும், அழிவுகளையும், எச்சங்களையும் பார்வையிட்டுத் திரும்பிய ஆயர் அவர்கள் எமது மக்களின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவரிடம் குறிப்பிட்டுள்ளதாக அறியவந்துள்ளது. அத்துடன், அங்கு எல்லாமே அழிவடைந்து போயுள்ளதாகவும், பார்க்கும் இடங்கள் எல்லாம் போரின் கோரமுகத்தை அடையாளப்படுத்தி நிற்பதாகவும் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். வன்னியின் மேலும் சில பகுதிகளுக்கும் ஆயர் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. |
போரின் கொடூரங்களால் எமது மக்களின் எதிர்காலமே கேள்விக்குறி: புதுமாத்தளனுக்கு சென்று திரும்பிய யாழ். ஆயர் கவலை
Lagt inn av
chandran
06.02.10



0 kommentarer