கைது செய்யப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யுமாறு மாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்தமைக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பௌத்த பிக்குகளை எதிர்க்கட்சிகளின் பிரசாரக் குரலாக ஒலிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. |
இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக பௌத்த மத பிக்குகளை அரச வானொலி எச்சரித்திருப்பதானது முக்கியத்துவம் பெறுகிறது. சிங்கள மக்களின் அரச எதிர்ப்புணர்வை அரசிற்கெதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமாக மாற்றுவதற்கு இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் பலமான தலைமை இல்லாமை துர்ப்பாக்கியமானது என கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். மகிந்த எதிர்ப்புப் போராட்டமானது பௌத்த பிக்குகளின் தலைமையிலான இனவாதப் போராட்டமாக மாறும் அபாயம் உள்ளது. 36 வருடங்கள் நாட்டைச் சூழ்ந்திருந்த பிரிவினைவாத அபாயத்திலிருந்து நாட்டைப் பாதுகாத்த கதாநாயகன் சரத் பொன்சேகா எனக் குறிப்பிடும் இந்த அறிக்கையில் பேரினவாதம் இழையோடுவதை அவதானிக்க முடிகிறது. மகிந்த பாசிசத்தைக் கூட பௌத்த சிங்கள பேரினவாத அடிப்படையில் அணுகும் அபாயம் எதிர்கொள்ளப்பட வேண்டும். |
பொன்சேகாவை விடுவிக்க வேண்டுகோள் விடுத்த பௌத்த தேரர்களுக்கு இலங்கை வானொலி எச்சரிக்கை
Lagt inn av
chandran
14.02.10



0 kommentarer