இலங்கையர்கள் 32 அடங்கிய சட்டவிரோத படகு ஒன்றை அவுஸ்திரேலிய கடற்படையினர் இடைமறித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் இலங்கையில் இருந்து நேரடியாக அவுஸ்திரேலியாவுக்கு பயணித்தவர்கள் என அவுஸ்திரேலிய கடற்படையினர் கருதுகின்றனர். இதனையடுத்து மீட்கப்பட்ட இவர்கள் அனைவரும் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இந்த வருடத்தில் மாத்திரம் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 35 வது சட்டவிரோத படகு இதுவாகும்.



0 kommentarer