சக இராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு படைச் சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும், கடுமையான காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு படைச் சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. காயமடைந்தவர்கள் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்க்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சக இராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு படைச் சிப்பாய்கள் பலி
Lagt inn av
chandran
03.10.09



0 kommentarer