Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்த அமெரிக்காவின் அறிக்கையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமையை அடுத்து, அமெரிக்காவில் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்கு ஏற்கனவே அவருக்கு விடுக்கப்பட்டிருந்த உத்தியோக பூர்வ அழைப்பை அந்த நாட்டு அரசு ரத்துச் செய்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுபவை வருமாறு:
அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமைக்கு உரித்தான பச்சை அட்டை(கிரீன் காட்) யைக் கொண்டவரான ஜெனரல் சரத் பொன் சேகா கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டன் பயணமானார்.
சரத் பொன்சேகா உத்தியோகபூர்வமற்றும் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொள்கின்றார் என்றே முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சரத் பொன்சேகா அமெரிக்காவின் தென்னாசிய விவகாரங்களுக்கான உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக்கை அமெரிக்காவில் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் ஹவாயில் உள்ள அமெரிக்க பசுபிக் கட்டளை பீடத்தில் இடம்பெறும் நிகழ்வில் சரத் பொன்சேகா கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், ஹவாய் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சரத் பொன்சேகாவிற்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பு கடந்த சனிக்கிழமை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துவிட்டது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பட்ரீசியா புட்டெனிஸ், சரத் பொன்சேகாவிற்கு இத்தகவலைத் தெரியப்படுத்தினார் என இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டன.

அதிகம் பார்க்கப்பட்டவை