Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

யுத்தத்தில் வெற்றிப் பெறுவதை விட, சமாதானத்தை வெற்றி கொள்வதே மிகவும் சிக்கலானது என இந்திய கொள்கை ஆய்வு மத்திய நிலையத்தின் உறுப்பினரான பேராசியர் பிரம்மா செல்லசாமி தெரிவித்துள்ளார்.
சமூகத்தினுள் கூட்டு வன்முறைகளை கையாளும் எந்த குழுவும், நீதிக்கு முரணானதே எனவும் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யுத்தகாலத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கொடுமையாக கொல்லப்பட்டமை உண்மையே என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதான செயலக தலைவர் புலித்தேவன் உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் வெள்ளை கொடிகளுடன் மே மாதம் 17ம் திகதி காலப்பகுதியில் சரணடைந்தனர்.

இது தொடர்பில் சரணடைவதற்கு முன்னர், ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன், ஐக்கிய நாடுகளின் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் மற்றும் ஐக்கிய நாடுகளின் பல சிரேஷ்ட்ட உறுப்பினர்களுடனும் அவர்கள் செய்மதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

இதில் வெளிவிவகார அமைச்சர் பாலித்த கோகொன்னவும் இணைந்திருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் சரணடைந்த புலி உறுப்பினர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கொலை செய்யப்பட்டதாக பேராசிரியர் செல்லசாமி தெரிவித்துள்ளார்.

இதற்கு தேசிய புலனாய்வு துறையினர் பாரிய ஒத்துழைப்பை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கிழக்கு யுத்ததின் போது, சரணடைந்ததாக கூறப்படும் 600 பொலிசாரை புலிகள் கொன்றமை தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், மனித உரிமை மீறல்களும், யுத்த குற்றங்களும் யுத்த காலங்களில் செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு தரப்பினர் மீது பொதுவான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அரசாங்கம் தமது பாரிய எறிகனை வீச்சுக்களை நடத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்று குவித்தது, விடுதலைப் புலிகள் பொது மக்களை தடுத்து வைத்து கேடயங்களாக பயன்படுத்தியமையும் அது போன்றதுதான்.

ஆனால் அவை அனைத்தும் சாட்சியமற்று மறைந்து போனது.

அரசாங்கம் யுத்த பிரதேசங்களுக்கு சுயாதீன செய்தியாளர்களை அனுப்பாததன் மூலம் அவை அனைத்தையும் மறைத்து விட்டது என்பதே உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்தியா இலங்கைக்கு ஆயுதம் வழங்கிய தொடர்பில் எவ்வித சந்தேகமும் இல்லை என தெரிவித்த அவர் கப்பல் மற்றும் புலனாய்வு உதவிகளையும் யுத்த காலத்தில் இலங்கைக்கு இந்தியா வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இது இலங்கை மீதான வெளிநாடுகளின் ஆதிக்கத்தை குறைக்கும் பொருட்டே மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஆதிக்கம் அற்ற, சமாதானமான இலங்கையையே இந்தியா விரும்புவதாக தெரிவித்த அவர், அதன் காரணமாக பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளின் இலங்கை மீதான ஆதிக்கத்தை இந்தியா கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிராந்திய வல்லரசுக்கான போட்டியின் மத்தியில் இலங்கை மக்கள் உட்படுத்தப்படுவது, இலங்கை மற்றம் ஆசிய மக்களுக்கு உகந்தது இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே இலங்கையின் மீள் கட்டுமானம் மற்றும் சீர்படுத்தலுக்கான முனைப்புகளை இந்தியா மேற்கொள்ள வேண்டிய நிலை உருவானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒரு நடவடிக்கை மாத்திரமே, தமிழர்களின் நீண்டநாள் கலாசார மற்றும் அரசியல் அபிலாசைகள் மீதான சந்தேகங்களுக்கு விடையாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இலங்கையின் நீண்டநாள் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியாவின் நடவடிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்க பதிலளித்த அவர், இந்த விடயம் தொடர்பில் இந்தியாவில் மாத்திரம் செய்யக்கூடிய விடயம் என்ற ஒன்றை தனியாக அடையாளப்படுத்த முடியாதிருப்பதாக தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கமே அக்கறை செலுத்தி தமது முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அது,தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், இலங்கையின் முப்படையிலும், இனரீதியாவும், சமய ரீதியாகாவும் ஒதுக்கப்படாமல், சமூகத்தின் அனைத்து அங்கங்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அக்கறை செலுத்த வேண்டியதும், விரும்ப வேண்டியதும் அனைவரினதும் பொறுப்பாகவே தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முத்துவேல் கருணாநிதி போன்ற தமிழக அரசியல் வாதிகள், இலங்கை தமிழர்களை வைத்து, அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் முகாம்களில் சிக்கயிருக்கின்ற மக்கள் தொடர்பில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் இல்லை எனவும் அவர் இந்த செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக மக்களின் மத்தியில் ஓர் மாயையை ஏற்படுத்தும் வகையிலேயே, தமிழக நாடாளுமன்ற குழுவை இலங்கைக்கு அனுப்பிவைத்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையிலேயே இலங்கையின் முகாம்களுக்குள் இந்திய நாடாளுமன்ற குழு அனுமதிக்கப்பட்டனர் எனவும் பேராசிரியர் செல்லசாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தில் இருக்கின்றமையால், சீனா, இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யுத்தக்காலங்களில் ஒத்துழைப்பு வேண்டி, இந்திய, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை முறையாக முகாமைப்படுத்திய ஜனாதிபதி, யுத்த நிறைவுக்கு பின்னர் அவற்றை ஒதுக்கி வெற்றிகளை தனித்து கொண்டாடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் தற்போதைய சமாதான காலத்திலும், இலங்கையின் இராணுபடையணியை விஸ்த்தரிக்கும் வகையில் வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களை ஜனாதிபதி மேலும் அதிகரித்துள்ளார்.

ஏற்கனவே இலங்கை இராணுவம் ஆளணியில் பிரித்தானியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் இராணுவ ஆளணியை விட பெரியதாக இருப்பதாக தெரிவித்த அவர், புலிகள் வெற்றிக்கொள்ளப்பட்டதன் பின்னர், இவ்வாறான படையணி அதிகரிப்புக்கான அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகம் பார்க்கப்பட்டவை