Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

புலிகள் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளரான கே. பியைக் கைது செய்ததன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உலக நாடுகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளாரென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து ஒழிப்பதாகக் கூறியே 2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார். சமாதானம் முறிவடையும் பட்சத்தில் யுத்த நடவடிக்கைகளில் பிரவேசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என ஜனாதிபதி இந்தியாவுக்கான தனது முதலாவது விஜயத்தின் போது, இந்தியத் தலைவர்களிடம் கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டியின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி யுத்தத்தை நிர்ப்பந்திக்கவில்லை. ஜனாதிபதி முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை அழித்துப் புலிகள் அமைப்பை மீளக்கட்டி எழுப்புவதற்கான சதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கூறப்படுவது இந்த சதியின் ஒரு பகுதியாகும். ஜனாதிபதி தலைமையில் நானும் முப்படைத் தளபதிகளும் உறுதியான திட்டமிடலின் கீழேயே புலிகளை அழித்தோம். ஜனாதிபதி இந்தியாவில் வைத்து தெரிவித்ததைப் போன்றே செய்தும் காட்டி விட்டார். பலர் இது வெறும் வாய் வார்த்தையென்றே நினைத்திருந்தனர். ஆனால் அவர் அதனை அத்தோடு நிறுத்தி விடவில்லை. புலிகள் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளரான கே. பியைக் கைது செய்து மகத்தான வெற்றியை நிலைநாட்டியதன் மூலம் உலக நாடுகளையே அவர் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கைது செய்யப்பட்டிருக்கும் கே. பியிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டு பார்க்கையில், புலிகளின் வலைப்பின்னல் சர்வதேச நாடுகளிடையே விசாலமாக பரந்துள்ளதும் தெரிய வந்திருக்கின்றது. இவர்களது சொத்தும் விசாலமானது. பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளின் போது எமது ஜனாதிபதி பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டார் எனவும் கூறினார்.

அதிகம் பார்க்கப்பட்டவை