திருகோணமலை, புல்மோட்டைப் பகுதியில் அமைந்திருக்கும் இடம்பெயர் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 78 தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் கடத்திச் சென்றுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (09.10.2009) இரவு பவள் கவச வாகனங்கள் சகிதம் புல்மோட்டை இடம்பெயர் முகாமிற்குள் புகுந்த இலங்கை இராணுவத்தினர் அங்கிருந்த 78 தமிழர்களை கடுமையாகத் தாக்கி வாகனங்களில் பலவந்தமாக ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர் மீண்டும் வந்து புல்மோட்டை முகாமிற்குள் நுழைந்த இலங்கை இராணுவத்தினர் அங்கிருந்த இளம் தமிழ் பெண்களை பிடித்துச் செல்வதற்கு முற்பட்ட பொழுது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இலங்கை இராணுவத்தினரின் இந்த அடாவடித்தனத்தால் புல்மோட்டை இடம்பெயர் முகாமில் பெரும் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
புல்மோட்டை வதைமுகாமில் தங்கியிருந்த 78 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் கடத்தல்
Lagt inn av
chandran
10.10.09



0 kommentarer