அரசாங்கம் தமது இருப்பில் உள்ள பல தொன்கள் நிறையைக் கொண்ட தங்க இருப்புகளை விற்பனை செய்ய முயற்சி மேற்கொண்டமை நிரூபிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் சண்டேலீடர் பத்திரிகையில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
அரசாங்கம் தமது இருப்பில் உள்ள தங்கங்களை விற்பனை செய்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதனை கொள்வனவு செய்வதற்காக வெளிநாட்டவர்கள் இருவர் இலங்கைக்கு வந்து ஹொலிடே இன் ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
எனினும் இதனை மறுத்த அரசாங்கத்தரப்பினர் இது பிழையான செய்தி எனக்குறிப்பிட்டனா
அரசாங்கம் ‘தங்க’ இருப்புகளை விற்பனை செய்ய முயன்றமை நிரூபிக்கப்பட்டுள்ளது: ரணில் விக்கிரமசிங்க
Lagt inn av
chandran
22.09.09



0 kommentarer